அகரக் காதல்:
அன்னைத் தமிழைக் காக்க
அல்லும் பகலும் உழைப்பதுவும்
அறத்துக்கும் நேர் நிகரன்றோ!
அடர்வனம் மாரி தருவதுபோல்
அன்பர் நாம் தமிழுக்கு
அணிபல சேர்த்திடலும் நன்றன்றோ!
அகிலமெலாம் சிறப்புறச் செய்ய
அரியனை மீதமர்த்த தண்டமிழை
அனைவரும் ஏற்றல் வேண்டுமன்றோ!
அரவங்கண்டு சேனைக் கொள்ளும்
அச்சம் தவிர்த்து நந்தமிழை
அரவணைத்து துதித்தலும் பற்றன்றோ!
அருமை
வருகைக்கு நன்றி !